Posted on 06.22.2022 by Farook in Local News with 0 Comments
21வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
20ம் திகதி இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது நீதிமன்ற சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் குறித்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
புதிய சட்டமூலம் அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை அமுல்படுத்துவதுடன் 20 திருத்தச் சட்டத்தின் பாதகமான சரத்துக்களை நீக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது சம்பந்தமான எந்தவொரு உறுப்புரையும் இந்த சட்டமூலத்தில் இல்லை. ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் தற்போது அரசாங்கம் எவ்வித நடவடிக்கையயும் எடுக்கவில்லை என்பதுடன், மாறாக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதியின் கீழ் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவே தெரிகின்றது.